அதிமுகவிற்கு நான் மட்டும் பிரச்சாரம் செய்தேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். மக்களவை தேர்தலில் அதிமுகவிற்கு ஏற்பட்ட தோல்விக்கு பிறகு முதல் முறையாக சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இபிஎஸ், பாஜகவிற்கு மோடி, அமித் ஷா, ஜேபி நட்டா என பலர் வந்து தமிழகத்தில் பரப்புரை செய்தனர்.

திமுகவிற்கு அவர்கள் கூட்டணி கட்சியினர் பரப்புரையில் ஈடுபட்டனர். ஆனால் அதிமுகவை பொறுத்தவரை நான் மட்டும் தனி ஆளாக அனைத்து இடத்திற்கும் சென்ற பிரச்சாரம் செய்தேன். 2019 மக்களவைத் தேர்தலை விட ஒரு சதவீதம் அதிகமாக வாக்குகள் பெற்றுள்ளதால் அதிமுகவுக்கு இது வெற்றியே என்று தெரிவித்துள்ளார்.