பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பின் த்ரிஷாவுக்கு அதிக வாய்ப்புகள் வர தொடங்கி இருக்கிறது. இப்போது விஜய்க்கு ஜோடியாக அவர் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது விஜய் மட்டுமல்லாமல் த்ரிஷாவுக்கும் 67-வது படம் தான். அப்படத்தை முடித்தபின் த்ரிஷா தற்போது ஒரு முக்கிய இயக்குனரின் படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

த்ரிஷாவின் 68வது  திரைப்படத்தை கவுரவ் நாராயணன் டைரக்டு செய்ய போகிறார். இந்த படத்தில் பல முக்கியமான நடிகர்கள் நடிக்க உள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. அதோடு இப்படத்திற்கு “கொலை வழக்கு” என டைட்டில் வைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.