கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி சந்தை அருகே கண்ணமங்கலம் பகுதியில் ஒரு தோப்பு உள்ளது. இங்கு வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த நிலையில் அவரது அருகே வாலிபர் ஒருவர் சுயநினைவு இல்லாமல் மயங்கி கிடந்தார். அதாவது அந்த பிணத்தின் மீது சாய்ந்த நிலையில் அந்த வாலிபர் கிடந்த நிலையில் அருகே ரத்த கறைகளுடன் ஒரு கத்தியும் கிடந்தது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக வெள்ளிச்சந்தை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சுயநினைவு இல்லாமல் மயங்கி கிடந்த வாலிபரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் நினைவுக்கு வராத நிலையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது.

அதாவது பரத் என்ற 22 வயது வாலிபர் பிணமாக கிடந்தது தெரிய வந்த நிலையில் அவரது அருகே மயங்கிய நிலையில் கிடந்தது அனீஸ் (32) என்பதும் தெரிய வந்தது. அதாவது பரத், அனீஸ் உட்பட நண்பர்கள் ஆறு பேர் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள தோப்புக்கு சென்று சிக்கன் சமைத்து சாப்பிட்டுள்ளனர். பின்னர் அவர்கள் மது குடித்துவிட்டு மகிழ்ச்சியாக இருந்த நிலையில் திடீரென அனீஸ் நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஏற்பட்டுள்ளார்.

இதனை பரத் கண்டித்ததால் திடீரென சிக்கன் வெட்டிய கத்தியை வைத்து பரத்தை அவர் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் மயங்கிய அனீஸ் அவர் இறந்தது கூட தெரியாமல் அவரது சடலத்தின் மீது மயங்கிய நிலையில் சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளார் என்பது தெரிய வந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.