
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) அசல் எட்டு அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தொடர்ந்து ஐபிஎல் அணிகளின் முக்கியமான அணியாக திகழ்ந்து வருகிறது. 15 வருடங்களாக விளையாடி வரும் போதும் பல வெற்றிகளை பெற்று பல சாதனைகளுக்கு சொந்தம் கொண்டாடி வரும் பட்சத்திலும் கோப்பை வெல்லாதது ஏமாற்றமான ஒன்றுதான் என்ற போதிலும், அதனுடைய உண்மையான ரசிகர்கள் அதை ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. நடப்பு ஆண்டு ஐபிஎல் இல் ஆரம்பத்தில் அதிக போட்டிகள் தோல்வியுற்றாலும் தற்போது தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆப் செல்வதற்கான வாய்ப்பை கையில் தக்க வைத்துள்ளது ஆர்சிபி. இதற்கு முன்பாக ஆர் சி பி தொடர்ச்சியாக வெற்றி பெற்ற ஆண்டுகள் குறித்த ஒரு சிறு தொகுப்பை காணலாம்.
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் அரங்கில் கவர்ந்திழுக்கும் கேப்டன் ராகுல் டிராவிட் தலைமையில் ஆர்சிபி களமிறங்கியது. அவர்கள் தங்கள் முதல் சீசனில் ஏழாவது இடத்தைப் பிடித்தாலும், 2009 ஆம் ஆண்டில், தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வென்று அவர்கள் முதல் ஐபிஎல் இறுதிப் போட்டியை எட்டினர், அதில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம் தோல்வியுற்றனர்.
2011 சீசன் ஆர்சிபியின் பொற்காலம். டேனியல் வெட்டோரியின் தலைமையின் கீழ், குழுநிலையில் தொடர்ந்து ஏழு போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்தது. கிறிஸ் கெய்ல், விராட் கோஹ்லி, ஏபி டி வில்லியர்ஸ் போன்றவர்கள் நன்றாக விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த போதிலும் , அவர்களின் கனவு ஓட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இறுதிப் போட்டியில் நிறுத்தியது.
அடுத்தடுத்த சீசன்களிலும் ஆர்சிபி வலுவான போட்டியாளராகத் தொடர்ந்தது. அவர்கள் 2016 இல் கேப்டன் விராட் கோலி தலைமையில் இறுதிப் போட்டியை எட்டினர், ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்வியடைந்தனர். 2024 ல் முதலில் தோல்வியுற்றாலும் அடுத்தடுத்த ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று முன்னேறி, RCB மீண்டும் வரலாற்றில் தங்கள் பெயரை பொறித்துள்ளது. நான்காவது முறையாக, அவர்கள் ஐபிஎல் சீசனில் *தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை* பதிவு செய்துள்ளனர்.
இந்த குறிப்பிடத்தக்க சாதனை இதற்கு முன்பு 2009, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அடையப்பட்டது. மூன்று முறையும், அவர்கள் தங்கள் உறுதியை வெளிப்படுத்தி, ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு வந்தனர். இதுவரை தொடர்ச்சியாக ஐந்து அல்லது அதற்கு மேல் வெற்றி பெற்ற ஆண்டு முழுவதும் ஆர் சி பி இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. எனவே இம்முறையும் தகுதி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.