மத்தியப் பிரதேசத்தின் சிங்கரௌலி மாவட்டத்தில், ஒரு மாணவர் தேர்விற்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றபோது, போலீசார் அவரை தடுத்து நிறுத்தியதால் அசாதாரணமான சம்பவம் நடந்துள்ளது. மாணவரிடம் லைசன்ஸோ, வாகனக் கடவுச்சீட்டுகளோ இல்லாததால், போலீசார் அவரை நிறுத்தி விசாரணை செய்தனர். இதனால் கோபமடைந்த மாணவர் திடீரென அருகிலிருந்த மின்கம்பத்தில் ஏறினார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த மாணவன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக மின்கம்பத்தில் ஏறிக்கொண்ட நிலையில் அவரை அங்கிருந்தவர்கள் கீழே இறங்குமாறு கூறினர். ஆனாலும் அந்த மாணவன் விடாப்படியாக கீழே இறங்க மறுப்பு தெரிவித்துவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து கடைசியாக அந்த மாணவர் கீழே இறங்கி வந்தார். மேலும் இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.