தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதால் தற்போது அதற்கு தயாராகி வருகிறார். தமிழக வெற்றி கழகத்தின் தற்காலிக தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விஜயை சந்தித்ததற்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தில் 28 அணிகள் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் திருநர் அணி என்ற திருநங்கைகளுக்காக ஒரு அணி உருவாக்கப்பட்ட நிலையில் இது சர்ச்சையாக மாறியது.

அதாவது அணி  உருவாக்கப்பட்டது வரவேற்பை பெற்றாலும் அது 9-வது இடத்தில் இடம் பெற்றது திருநங்கைகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில்  15-வது இடம்பெற்றுள்ள சிறுவர்கள் அணியும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தேர்தல் ஆணையத்தின் விதிப்படி சிறுவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது. அப்படி இருக்கும்போது எந்த அடிப்படையில் சிறுவர்கள் அணி உருவாக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இந்த அணியின் செயல்பாடுகள் என்ன என்பது குறித்தும் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.