தேர்தல் பத்திர திட்டத்தில் மேலும் ஒரு முறைகேடு நடந்தது தெரிய வந்துள்ளது. நிறுவனங்கள் சட்டப்படி, ஒரு நிறுவனம் 3 ஆண்டுகளை நிறைவு செய்தால்தான் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்க முடியும். ஆனால், SBI தகவல்படி, 3 ஆண்டுகள் நிறைவடையாத 20 நிறுவனங்கள், ₹103 கோடி வரை நன்கொடை வழங்கியுள்ளன. இது பற்றி X-இல் பதிவிட்டுள்ள பிரசாந்த் பூஷன், தேர்தல் பத்திரங்கள் மூலம் பல மோசடிகள் நடந்துள்ளதாக கூறியுள்ளார்.