தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் எனவும் கடைசி வரை வீரமாக போராடி சரித்திரம் படைத்துள்ளோம், தோல்வியை படிக்கலாக மாற்றி 2026 தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க கடுமையாக உழைப்போம் என பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேமுதிக பெரிய வெற்றியை பெற வேண்டும், தேமுதிகவுக்கு வாக்களித்த மக்களுக்கும் கடுமையாக உழைத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றி. பல சவால்களை எதிர்த்து அசைக்க முடியாத சக்தியாக இந்த கூட்டணியை மாற்றிய தொண்டர்களுக்கு நன்றி என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.