ஹரியானா மாநில அரசு அலுவலகங்களில் குப்பைகளை அகற்றும் தூய்மை பணியாளர் பணிக்கு 40 ஆயிரம் இளங்கலை பட்டதாரிகள், 6000 மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் என 1.2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். துப்புரவாளர் பணி செய்பவருக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.

ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்தது அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஹரியானாவில் அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மையை மாநில பாஜக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.