தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த மின்சார விபத்தில் தம்பதியொருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, எல்பி நகரில் உள்ள சாகர் ரிங் சாலைக்கு அருகிலுள்ள சிந்தலகுண்டா பகுதியில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள ஒரு கோவிலின் முன் நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்த இருவரின் மீது, உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது.

கம்பி விழுந்ததும் மின் அதிர்வுடன் இருவரும் உயிருடன் எரிந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த இருவரும் பிச்சைக்கார தம்பதியராக இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிப்பதோடு, அவர்களின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து எல்பி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரச்சகொண்டா போலீசார் தெரிவித்துள்ளனர். மின்சார வாரியத்தின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதோடு, சம்பவத்தின் காரணம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உளளது.