
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ரகசிய நடவடிக்கையை பாகிஸ்தான் உளவுத் துறைக்கு தகவல் கசியவிட்ட கடற்படை ஊழியர் கைது செய்யப்பட்டதால் அதிர்ச்சி நிலவுகிறது. இந்த நடவடிக்கையை ராஜஸ்தான் மாநில சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து மூத்த போலீசர் விஷ்ணுகாந்த் குப்தா கூறியதாவது: “டெல்லி கடற்படை தலைமையகத்தில் பணியாற்றும் விஷ்ணு யாதவ், பாகிஸ்தான் உளவுத்துறை சார்ந்த ப்ரியா ஷர்மா என கூறும் பெண்ணுடன் சமூக வலைதளங்கள் மூலமாக நெருக்கமாக இருந்துள்ளார். இந்திய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான ரகசிய தகவல்களை அவர் அந்த பெண்ணிடம் பகிர்ந்து வந்தார். அதற்காக கிரிப்டோ கரன்சி மூலமாக பணம் பெற்றுள்ளார்” என்றார்.
மேலும், ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய, விஷ்ணு யாதவ் இந்த உளவு நடவடிக்கையில் ஈடுபட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது பாதுகாப்பு அமைப்புகளில் அந்தரங்க மோசடிக்கு எதிரான திடீர் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.