
ராணிப்பேட்டை மாவட்டம் மருதாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(38). இவர் விவசாயம் பார்த்து வந்தார். அந்த பகுதியில் நேற்று நள்ளிரவு நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வீட்டிற்கு வெளியே மின்கம்பி அறுந்து கிடந்தது. இதனை அறியாத முருகன் மின்கம்பியை மிதித்ததால் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் திவ்யா தனது மகன் திராவிட், மகள் மித்ரா ஆகியோருக்கு விஷம் கொடுத்து அவரும் தற்கொலைக்கு முயன்றார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.