
தமிழகத்தில் திறமையான கிரிக்கெட் வீரமணிகளை கண்டறிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மே மாதம் 13, 14, 17, 20, 21ஆகிய தேதிகளில் தமிழக முழுவதும் செல்லும் இந்த குழு 37 மாவட்டங்களில் உள்ள திறமையான கிரிக்கெட் வீராங்கனைகளை கண்டறிய உள்ளனர். தமிழ்நாடு பிரீமியர் லீக் போல இரண்டு ஆண்டுகளில் மகளிர் டி20 தொடர் நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழக கிராமப்புறங்களில் உள்ள திறமையான கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.