
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பிரிட்டனுக்கு சொந்தமான எப் 35 B லைட்னிங் போர் விமானம் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நேற்று அவசரமாக தரையிறங்கியது. இந்திய பெருங்கடலில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக பிரிட்டனுக்கு சொந்தமான HMS போர்க்கப்பலில் விமானத்தை தரையிறக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த விமானத்திற்கு மத்திய அரசிடம் இருந்து எரிபொருள் நிரப்ப அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் அது புறப்பட்டு செல்லும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரி கூறும் போது விமானி எரிபொருள் குறைவாக இருப்பதாக கூறி தரையிறங்க அனுமதி கேட்டார். தொழில்நுட்ப ரீதியாக உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த போர் விமானம் தற்போது பயன்பாட்டில் உள்ள மிகவும் மேம்படுத்தப்பட்ட பல்துறை போர் விமானங்களில் ஒன்று.
இது தொடர்பாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. தற்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அந்த விமானம் நின்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.