![](https://www.seithisolai.com/wp-content/uploads/2023/01/9f2ee709-ad7e-4c41-bc16-35d60df50c2a.jpg)
கடந்த 2007 ஆம் வருடம் தெலுங்கில் வெளியாகிய முன்னா திரைப்படத்தின் வாயிலாக டைரக்டராக அறிமுகமானவர் வம்சி. இதையடுத்து பிருந்தாவனம், யுவடு திரைப்படங்களை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது வம்சி விஜய் நடிப்பில் வெளியாகிய வாரிசு படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
![](https://www.seithisolai.com/wp-content/uploads/2023/01/3328ddce-772a-4cd0-bdba-098a297ab07f-300x150.jpg)
இந்நிலையில் டைரக்டர் வம்சி திருவண்ணாமலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அனைவர் அன்புக்கும் ரொம்ப நன்றி. வாரிசு படத்துக்காக நீங்க கொடுத்த அன்பு தான் என்னை இங்கு கொண்டு வந்திருக்கிறது. நான் இங்க சுவாமி தரிசனம் செய்ய வந்தேன். தமிழ்நாடு மக்கள் தன் மேல் இவ்வளவு அன்பு காட்டியதற்கு மிகவும் நன்றி என்று கூறினார்.