மதுரையில் மேம்பால கட்டுமான பணிகளை ‌ பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளக்கூடாது என்று திமுக எந்த விதமான அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. திருமாவளவன் நல்ல அறிவாளி மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டவர்.

அவர் அரசியலைப் பற்றி நன்கு புரிந்து கொண்டவர். திருமாவளவன் தனக்கு யாரும் அழுத்தம் கொடுத்தால் ஏற்க மாட்டார். மேலும் பொதுமக்கள் சாலைகள் தொடர்பாக புகார் தெரிவிக்க நம்ம சாலை என்ற செயலி இருப்பதால் அதில் புகார் தெரிவித்தால் 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். முன்னதாக ஆதவ் அர்ஜுனா திருவண்ணாமலையில் அமைச்சர் வேலு விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்துக்க கூடாது என்றும் திமுக கூட்டணியில் தேவையில்லாமல் பிரச்சனைகள் வரும் என்றும் திருமாவளவனிடம் கூறியதாக கூறிய நிலையில் தற்போது அமைச்சர் அவருக்கு எந்த அழுத்தமும் தரவில்லை என்று கூறியுள்ளார்.