ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலவர் மாவட்டத்தில் பகானி நகர் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக கணையாலால்-ரவீனா என்ற  தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சம்பவ நாளில் கணவன் மனைவிக்கு இடையே ஏதோ குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குள் வாய் தகராறு முற்றிய நிலையில் கோபத்தில் மனைவி தன் கணவனின் நாக்கை பற்களால் கடித்து துப்பினார்.

இதில் அவரின் நாக்குத்துண்டான நிலையில் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்திற்கு பிறகு தன் தவறை நினைத்து வருந்திய மனைவி ஒரு அறைக்குள் சென்று அராவாளால் வெட்டி தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடனடியாக குடும்பத்தினர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி அவரை காப்பாற்றினர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Mews.in (@mewsinsta)