உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி பகுதியில் கடந்த 22 ஆம் தேதி ஒரு திருமணம் நடைபெற இருந்தது. அதன்படி திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த திருமணத்தை பெற்றோர் ஏற்பாடு செய்திருந்த நிலையில் தன்னுடைய வருங்கால மாப்பிள்ளையை நினைத்து ஏராளமான கனவுகளோடு மணப்பெண் திருமணத்திற்கு சம்மதித்தார். ஆனால் மணமகளின் கனவு ஒரே நொடியில் கலைந்து போனது. அதாவது மண மேடைக்கு மணமகன் குடிபோதையில் வந்தார். அவர் மணமகளுக்கு பதிலாக மாலையை அவருடைய நண்பர் கழுத்தில் குடிபோதையில் போட்டுள்ளார்.

இதனால் மணமகள் மிகவும் அதிர்ச்சி அடைந்த நிலையில் பின்னர் அந்த வாலிபரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டார். அந்த பெண்ணை உறவினர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்த முயற்சி செய்த போதிலும் திருமணத்தின் போதே இப்படி குடிபோதையில் வருகிறார் என்றால் திருமணம் முடிந்த பிறகு எப்படி இருப்பார் என்று கூறியதோடு திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் திருமணம் நின்று போனது. மேலும் இது தொடர்பாக மணமகளின் குடும்பத்தினர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ள நிலையில் அவர்கள் மணமகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.