
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவராஜ்குமார். இவர் தமிழில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் நடித்துள்ளார். கன்னடத்தில் பிஸியான நடிகராக வலம் வரும் சிவராஜ் குமாருக்கு சமீபத்தில் புற்றுநோய் இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அவர் அதனை உறுதிப்படுத்தவில்லை. தனக்கு என்ன பிரச்சனை என்பதை இதுவரை மருத்துவர்கள் கண்டுபிடிக்கவில்லை என்று சிவராஜ்குமார் கூறியிருந்தார்.
அவருக்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவராஜ்குமார் அவருடைய மனைவியுடன் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சிவராஜ்குமாரும் அவருடைய மனைவி கீதாவும் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். மேலும் சிவராஜ்குமார் மற்றும் அவருடைய மனைவி இருவரும் முடி காணிக்கை செலுத்திய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.