
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஜூலை மாதம் 7- ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. காலை 6.15 முதல் 6. 50 மணிக்குள் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.