கலைஞர் கருணாநிதியை நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், மறைந்தார் என்று சொல்வதை விட கலைஞர் எங்கும் நிறைந்துள்ளார் என்றே கருதுகிறேன் என தெரிவித்தார். மேலும் கலைஞர் என்னை கண்காணித்து வருகிறார் என்ற எண்ணத்திலேயே பணியாற்றி வருகிறேன். இந்தியாவிலேயே முதன்முதலாக உழவர்களுக்கு இலவச மின்சாரம் தந்தவர் கருணாநிதி. திமுக ஆட்சியை ஏழை எளிய மக்கள் பயன்பெறும் ஆட்சியாக தான் இருந்தது. திராவிடம் என்ற சொல்லை பார்த்து சிலர் பயப்படுகிறார்கள்.

கண்ணை மூடிக்கொண்டு விதாண்டவாதம் செய்கிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடலின் உள்ளடக்கம். பாஜாவுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் மற்றும் வேறுபாடுகளை கலைந்து ஒன்றிணைய வேண்டும் என்றும் விழிப்புடன் இருந்து நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுக்க போராடி வெற்றி பெறுவோம் எனவும் ஸ்டாலின் பேசியுள்ளார்.