
நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பாக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும் வினாத்தாள் கசிவு செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகின்ற ஜூன் 24ஆம் தேதி திமுக மாணவரணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் தேதி பிறகு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆளுங்கட்சி மாணவரணி ஆர்ப்பாட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.