நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அப்பகுதியின் கபடி கழகச் செயலாளர் ஜெகபர் அலி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக சட்ட ஒழுங்கு சீரழிந்துள்ளது. இதற்கு ஜெகபர் அலியின் படுகொலை ஒரு சான்றாகும்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா புழக்கம், சாலை விபத்து, பெண் பாலியல் வன்கொடுமை போன்றவற்றில் தான் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. திருச்சியில் பெண்கள், குழந்தைகள், அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. மக்களுக்காக சமூக சேவை செய்யும் போராளிகள் படுகொலை செய்யப்படுவது திராவிட மாடல் ஆட்சி என கடுமையாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.