மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு,  தமிழகத்தில் எங்கள் அதிமுக ஆட்சியை மக்கள் குறை சொன்னார்களா? தூத்துக்குடி சம்பவம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்தது எல்லாம் முதல்வர் ஸ்டாலின் தான். மீத்தேன் திட்டம், புரிந்துணர்வு கையொப்பம் போட்டது ஸ்டாலின், தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு எல்லாம் ரொம்ப ஜோரா இருக்கிறது போல் முதல்வர் பேசி வருகின்றார்.

சோசியல் மீடியாவில் அப்போ குரல் கொடுத்தவங்க யாரையும் இப்போ ஆளையே காணோம். மக்களே இன்னைக்கு சோசியல் மீடியாக்களை தேடி விஷயத்தை எடுத்து செல்கிறார்கள். தமிழக மக்கள் முழுக்க முழுக்க இந்த திராவிட மாடல் ஆட்சியை முழுவதுமாக வெறுக்கின்றனர். தமிழகத்தில் அரசாங்கம் மற்றும் காவல்துறை என எதுவும் சரி இல்லை சட்ட ஒழுங்கு மோசமாக இருக்கின்றது என நீதிமன்றம் சொல்லி உள்ளது என செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.