
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று முன்தினம் திருச்சி சிவா எழுதிய 5 புத்தகங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் திமுக அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நூல் வெளியீட்டு விழா தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய x பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், கழக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எழுதிய 5 நூல்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். நம் கழகத் தலைவர் அவர்கள் திமுக இளைஞரணியை தொடங்கிய போது அதற்காக முன் நின்று உழைத்தவர் அண்ணன் திருச்சி சிவா. இளைஞர் அணி பாசறை கூட்டம் உட்பட தான் ஏறுகின்ற மேடைகள் தோறும் ஒரு ஆசிரியர் போல அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்கிறார். மேலும் எங்கள் அனைவருக்கும் திருச்சி சிவா ஒரு ஆசிரியர் போல் செயல்படுகிறார் என்று பதிவிட்டுள்ளார்.