
இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். குறிப்பாக ஓய்வு பெற வேண்டிய காலத்தில் ஒவ்வொரு மாதமும் வருமானம் தரும்படி ஏராளமான தபால் நிலைய திட்டங்கள் உள்ளன. அதன்படி முதிர்வு காலத்தில் 20 லட்சம் ரூபாய் வரை லாபம் தரக்கூடிய கிராமப்புற அஞ்சல் நிலைய காப்பீடு திட்டம் பற்றிய அறிவிப்பை தற்போது இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தில் 19 முதல் 45 வயது நிரம்பியவர்கள் யார் வேண்டுமானாலும் பயன்பெற முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் இணைந்த பிறகு வாடிக்கையாளர்கள் 15 ஆண்டு அல்லது 20 ஆண்டு பாலிசி அடிப்படையில் முதலீடு செய்த தொகையை இரட்டிப்பு லாபத்துடன் பெறலாம். ஆனால் பாலிசி திட்டம் முடிவடைவதற்கு முன்பு முதலீடு செய்த தொகையை பெற விரும்பினால் 60% தொகை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் அதன் பிறகு மீதம் உள்ள 4 சதவீதம் தொகை முதிர்வு காண முடிந்த பிறகு வட்டியுடன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 20 ஆண்டுகளுக்கு தினசரி 95 ரூபாய் சேமித்தால் 20 ஆண்டுகளில் 3.72 லட்சம் பெற முடியும். குழந்தைகளின் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு சேமிக்க நினைக்கும் பெற்றோர்கள் இந்த திட்டத்தின் சேர்ந்து இரட்டிப்பு லாபத்தை பெறலாம்.