அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கண்டிரா தீர்த்தம் கிராமத்தில் லாரா என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று காலை அரியலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தன்னுடைய உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவர் அங்கு வார்டு பகுதிக்கு வந்ததும் திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

இதனால் உடனடியாக லாரா கழிவறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்ட நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தையை கழிவறைக்குள் தலையை அமுக்கி வைத்து கொலை செய்தார். கழிவறையில் குழந்தையின் சத்தம் கேட்டதால் உடனடியாக அங்கு மக்கள் திரண்டனர்.

கதவை திறந்ததும் கழிவறை குழிக்குள் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. லாரா அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்த நிலையில் அவரை அங்கிருந்தவர்கள் மடக்கிப்பிடித்ததோடு உடனடியாக காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து லாராவை பிடித்த நிலையில், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து லாராவிடம் விசாரித்ததில் குழந்தை பிறந்ததுமே கொலை செய்தது தெரியவந்தது. மேலும் தவறான உறவின் காரணமாக குழந்தை பிறந்ததால் கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.