
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவினால் கடந்த வருடம் காலமானார். இதன் காரணமாக அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ள நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக சார்பில் விசி சந்திரகுமார் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி உருவாகியுள்ள நிலையில் தற்போது சீதாலட்சுமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெறாமல் ஈரோடு பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்ததாக சீதாலட்சுமி உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.