விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. விஜய் சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு 100 அடி கம்பத்தில் கொடியேற்றினார். பின்னர் பேசிய விஜய் அரசியல் நிலைப்பாடு, கட்சியின் கொள்கை, தலைவர்கள் குறித்து விரிவாக பேசினார். மேலும் பிளவுவாத அரசியல், திராவிட மாடல், நீட் எதிர்ப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு என அரசியல் பிரச்சினைகள் குறித்து பேசி மாநாட்டை அதிர வைத்தார்.

விஜய் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு உண்டு என பேசினார். மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் கட்சியின் கொள்கையில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைதள பக்கத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்கு பிடித்திருந்தது என பதிவிட்டுள்ளார். அதனை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்