
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் தமிழக பாஜக சார்பாக பொங்கல் விழா கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகி ஒருவர் தேசப்பற்று குறித்து பாடிய பாடல் ஒன்றை மேடையில் பாடினார்.
இதனை கேட்டுக் கொண்டிருந்த பாஜக அண்ணாமலை, திடீரென்று தன்னை அறியாமல் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் தன்னுடைய கண்களில் வழிந்த நீரை தன் துண்டால் துடைத்துக் கொண்டார். இது குறித்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.