
டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. முகமூடி அணிந்த இளைஞர்கள், ஒரு துணிக்கடையை குறிவைத்து கடைக்காரரை தாக்கியுள்ளதுடன், அங்கிருந்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து தப்பியோடினர்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், மூன்று பேர் கத்திகளை ஏந்தியபடி கடைக்குள் நுழைவது, மேலும் இரண்டு பேர் வெளியே காவல் காத்து நின்றது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
दिल्ली की कानून व्यवस्था का अंदाजा इस CCTV से लगाइए –
मंगोलपुरी में 5–6 बदमाशों ने एक दुकान पर धावा बोला। सबके मुंह ढके हुए थे। हाथों में हथियार थे। सड़क पर पब्लिक चल रही थी। बेखौफ बदमाश दुकान से कैश लूटकर ले गए !! pic.twitter.com/MZyPd3w48W
— Sachin Gupta (@SachinGuptaUP) June 13, 2025
கடைக்குள் இருந்த ஊழியர்கள் அச்சமடைய, மர்ம நபர்கள் அச்சுறுத்தியபடி பணத்தை வாங்கிச் சென்றனர். குறைந்த நேரத்தில் பெருமளவு பணத்தை எடுத்துவிட்டு அவர்கள் சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்றனர்.
இகடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் மங்கோல்புரியில் உள்ள ஒரு நகை ஷோரூமில் முகமூடி அணிந்த குழுவினர் கத்தி முனையில் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பதிவாகியிருந்தது.
தொடர்ச்சியாக நடைபெறும் கொள்ளைகள் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மர்ம நபர்களை அடையாளம் காண விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.