மகாராஷ்டிரா மாநிலம் தொம்பிவிலி பகுதியில் உள்ள மோட்டாகாவ் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவன் யஷ் சவான், தனது வீட்டு அருகே உள்ள விளையாட்டு மைதானம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, 5 முதல் 6 தெருநாய்கள் சிறுவனை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் காட்சிகள் அருகிலிருந்த CCTV கேமராவில் பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சிறுவன் எழுந்திருக்க முயன்றும் நாய்கள் விடாமல் சிறுவனின் கால்களை கடித்து இழுத்தது.

அந்த நேரத்தில் அருகிலிருந்த ஒருவர் விரைந்து வந்து சிறுவனை காப்பாற்றினார்.  பின்னர் யஷ் சவானை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தொம்பிவிலி மாநகராட்சி அதிகாரியான தீபா ஷுக்லா கூறுகையில், மூன்று நாய்கள் பிடிக்கப்பட்டு நாய்கள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.