கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே லாரியை வேகமாக முந்தி செல்ல முயன்ற போது இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பான காட்சிகள் ஒரு பேருந்தில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு பேருந்து லாரியை வேகமாக முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிரே வந்த மற்றொரு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் 54 பேர் பயணம் செய்த நிலையில், 7 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 7 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.