
மும்பையின் போரிவாலி ரயில் நிலையத்தில் நடந்த திடீர் சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. ஒரு பெண் பயணி நகரும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்தபோது சமநிலை இழந்து ரயில் மற்றும் மேடை இடையே சிக்கிவிடும் நிலையில் இருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு அதிகாரி (RPF) வேகமாக விரைந்து, அவரை பாதுகாப்பாக இழுத்து மீட்டார். இந்த விபரீத சம்பவத்திலிருந்து பெண்மணியை பாதுகாத்த அதிகாரியின் துணிச்சல் CCTV காட்சிகளால் வெளியானது. இது வைரலாக பரவிய நிலையில், ரயில்வே துறை பயணிகளுக்கு, நகரும் ரயிலில் ஏறவோ இறங்கவோ முயற்சிக்காதீர்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில், இந்த RPF அதிகாரியின் அதிரடி செயலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன. “இத்தகைய விழிப்புணர்வும், கடமை உணர்வும் கொண்ட பாதுகாப்பு அதிகாரிகளை அங்கீகரித்து பரிசளிக்க வேண்டும். இது அவர்களது மன உறுதியை உயர்த்தும்” என ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும், சில பயணிகள், ரயில்களில் தானியங்கி கதவுகளை (automatic doors) அமைப்பதன் மூலம் இத்தகைய விபத்துகளைத் தடுக்கலாம் என கோரிக்கை வைத்துள்ளனர்.
महाराष्ट्र के बोरीवली रेलवे स्टेशन पर एक महिला चलती ट्रेन से उतरते समय असंतुलित होकर गिर पड़ी। वहां मौजूद रेलवे सुरक्षाकर्मी ने तत्परता दिखाते हुए उसे बचा लिया।
कृपया चलती ट्रेन से चढ़ने या उतरने की कोशिश न करें।#MissionJeevanRaksha pic.twitter.com/6R8FALdD0d
— Ministry of Railways (@RailMinIndia) March 9, 2025