
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் ஜலாலாபாத்தின் முடியா காலா கிராமத்தில் ஒரு குடும்பத்தினர் வீட்டில் சுத்தம் செய்தபோது சுமார் 100 பாம்புகள் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீட்டில் வசிக்கும் ஷ்ரவன் குமார் என்ற குடியிருப்பாளர், வீட்டின் ஒரு மூலையில் இருந்த டிரம்மை எடுக்க முயன்றபோது, அதிலிருந்து ஒரு பாம்பு வெளியே வருவதைக் கண்டு பயந்தார். ஆனால், அது ஒரே பாம்பு என நினைத்ததும், டிரம்மை முழுவதுமாக அகற்றியதும், அதற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட பாம்புகள் சுருண்டு கிடப்பது தெரியவந்தது.
🚨 शाहजहांपुर: एक घर में मिले 100 से ज्यादा सांप 🚨
🐍 सपेरे की मदद से सांपों को पकड़ा गया
😨 सांपों से गांव में दहशत का माहौल
📍 थाना जलालाबाद के मुड़िया कला का मामला#Shahjahanpur #SnakeAlert #VillageFear #SnakeCatcher #JalalabadPolice @shahjahanpurpol @UpforestUp pic.twitter.com/uYQqZTsSFG— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) June 4, 2025
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக கிராம மக்களை அழைத்தார். அவர்கள் வந்தபோது, பாம்புகள் கையாளும் நிபுணர் உதவிக்கு வந்து, பாம்புகளை பாதுகாப்பாக அகற்றி, அருகிலுள்ள காட்டுப் பகுதியில் விட்டார்.
இந்த காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது. பாம்புகள் மிகவும் அபாயகரமானவையாக தோன்றினாலும், அவை விஷமுள்ளவையா, அல்லது அரிய இனத்தையா என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளிவரவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. 2022 ஆம் ஆண்டு உ.பி.யின் மதுவானா கிராமத்தில் ஒரு பழைய மண் பானைக்குள் 90 நாகப்பாம்புக் குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், மீரட்டில் ஒரு குடும்பம் வீட்டு உள்ளே கண்டுபிடிக்கப்பட்ட 52 பாம்புகளை கொன்று புதைத்தது.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாம்புகள் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக உள்ளதால், இத்தகைய சம்பவங்கள் பற்றி வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.