மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடுத்தர வயதான ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கும் நிலையில் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்தார். அவர் சூதாட்டத்திற்கு அடிமையானதால் 50,000 ரூபாய் வரை கடன் ஏற்பட்டது.

இதனால் தன் நண்பர்கள் சிலரிடம் அவர் பணம் வாங்கி அந்த கடனை அடைத்த நிலையில் பின்னர் நண்பர்களும் பணத்தை கேட்டு நெறுக்கியுள்ளனர். இதன் காரணமாக தன் நண்பர் ஒருவருக்கு அவர் தன் மனைவியை விற்று விட்டார்.

இந்நிலையில் அந்தப் பெண்ணை தன்னுடைய அடிமையாக நினைத்த அவரது நண்பர் பலமுறை அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். அவரது கொடுமைகளை தாங்க முடியாது அந்த பெண் ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து எப்படியோ தப்பித்து வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் படி ஜீரோ எஃப் ஐ ஆர் என்ற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்து தார் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த அந்த பெண்ணின் கணவன் மற்றும் நண்பனை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.