புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் ராமராஜன் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈஸ்வரி (28) என்ற பெண்ணை இரண்டாம் தரமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் ஏற்கனவே திருமணத்திற்கு முன்பு ஈஸ்வரிக்கு மூன்று மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருந்த நிலையில் ஈஸ்வரன் மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதன்படி இவர்கள் இருவருக்கும் 11 வயதில் பிரேம் என்ற மகனும், 9 வயதில் கீர்த்தின் என்ற மகனும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் ஈஸ்வரியின் தந்தை இறந்து விட்டதால் 30 ஆவது நாள் துக்கவிழாவுக்காக தன்னுடைய தாய் வீட்டிற்கு அவர் சென்ற நிலையில் 10 நாட்களாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அவர் தன் மனைவியை அழைத்து வர அந்த சென்ற நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கடுமையாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த ஈஸ்வரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தன் மனைவியை பல இடங்களில் குத்தி கொலை செய்தார். இது தொடர்பாக ராமராஜனை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது