
சவுதியில் பெற்ற மகளை தாயே புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த தாஹீர் என்பவர் சவுதியில் வேலை செய்து வருகின்றார். இவருக்கு பர்வீனா என்ற 17 வயது மகள் இருந்த நிலையில் தனது மகளை காணவில்லை என்று மின்னஞ்சல் மூலமாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருடைய வீட்டிற்கு சென்று சோதனை செய்த போது தாயே மகளை புதைத்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தான் கொலை செய்யவில்லை என்றும் மகள் தற்கொலை செய்து கொண்டதால் அவரை புதைத்ததாகவும் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.