தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த ஒரு வாகன விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கண்களையும் கலங்க வைத்துள்ளது. அதாவது ஒரு தாய் தன்னுடைய 6 வயது மகனை ஸ்கூட்டியில் பள்ளிக்கு அழைத்து சென்றார். அதாவது பவுரம்பேட்டை பகுதியில் உள்ள கீதாஞ்சலி பகுதியில் அபிமன்ஷூ ரெட்டி என்ற 6 வயது சிறுவன் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவனை சம்பவ நாளில் அவரது தாய் பள்ளிக்கு ஸ்கூட்டியில் வைத்து அழைத்து சென்றார். அப்போது பின்னால் இருந்து வந்த ஒரு டிப்பர் லாரி ஸ்கூட்டியின் மீது மோதியதில் நிலை தடுமாறி அந்த தாய் தன் மகனுடன் கீழே விழுந்தார். இதில் சிறுவனின் தலையில் லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது.

அதிர்ஷ்டவசமாக அந்த தாய் காயமின்றி உயிர்தப்பினார். தன் மகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அந்த தாய் கதறி துடித்த சம்பவம் அங்கு சென்றவர்களை வேதனையில் ஆழ்த்தியது. அந்தப் பெண் ஹெல்மெட் அணியாமல் அந்த கனரக வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது தான் எதிர்பாராத விதமாக அந்த லாரி ஸ்கூட்டியில் இடித்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.