LTTE தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக இயக்குநர் வ.கவுதமன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவுடன் அலைப்பேசியில் பேசியதாக இயக்குநர் கவுதமன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,  “பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி ஆகியோரும் நலமுடன் உள்ளனர்.

மாவீரர் நாளான இன்று (நவ., 27) மாலை 5.30 மணிக்குமேல் துவாரகா காணொளி வாயிலாகத் தோன்றி உலகத் தமிழரிடையே உரையாற்றுவார். துவாரகாவின் வருகையை மத்திய அரசு வரவேற்க வேண்டும். இவர்கள் அனைவரும் 2009 இலங்கை இறுதிப் போரின்போது மரணமடைந்துவிட்டனர் என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.