பெங்களூருவில் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அருகே, அலி அஸ்கர் சாலை பகுதியில் வியாழக்கிழமை மதியம் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் பொதுமக்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுபோதையில் இருந்த ஒருவர் பலாப்பழம் பறிக்க உயரமான மரத்தில் ஏறியபோது, நிலைதடுமாறி ஒரு கிளையில் தொங்கினார். அந்த நபர் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த நபரை மரத்தில் காண்பித்ததும், அருகிலிருந்த தூதரக அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாப்பு காவலர் அவரை நோக்கி கூச்சலிட்டுள்ளார். திடுக்கிட்ட அந்த நபர் மேலே ஏற முயன்றபோது, திடீரென அவரது கால்கள் வலுக்கி கிளையில் தொங்கினார். இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக விரைந்து வந்து ஒரு கூடாரத் துணி மூலம் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முயற்சி தோல்வியடைந்ததால், அந்த நபர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

 

இடுப்புப் பகுதியில் கடுமையாக காயமடைந்த அவர், உடனடியாக பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிகாரிகள் தெரிவித்ததாவது, “அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை, ஆனால் மருத்துவ சிகிச்சை அவசியம்” என கூறினர். மேலும் இந்த சம்பவம் மதுபோதையில் செய்யப்படும் ஆபத்தான செயல்கள் எவ்வளவு அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவூட்டும் நிகழ்வாக அமைந்துள்ளது.