ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும் தன்னை கருப்பு எம்ஜிஆர் என்று யாரும் அழைக்க வேண்டாம் என நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாற்றம் அறக்கட்டளை சார்பில் கோவையில் நடந்த டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், நான் சேவை செய்ய செல்லும் இடங்களில் சிலர் என்னை ஆண் அன்னை தெரசா என்று அழைக்கின்றனர். இதையெல்லாம் நான் ஒருபோதும் தலையில் வைத்துக் கொள்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.