
உத்திர பிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில் மௌலானா ஷாகிர் என்பவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் ஆன நாளிலிருந்து அவரது மனைவி தாடியை எடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் மௌலானா தாடியை எடுக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். அந்த பெண் தாடியை பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது எனவே அதை எடுத்து விடுமாறு பலமுறை சொல்லியும் கணவன் கேட்கவில்லை. இதனால் தன் கணவனின் தம்பியுடன் அவர் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
பல மாதங்களுக்குப் பிறகு அந்தப் பெண் மைத்துணருடன் மீரட்டுக்கு திரும்பிய நிலையில் காவல் நிலையத்திற்கு சென்று தன் கணவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதாவது தன் கணவர் அடித்து தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து துன்புறுத்துகிறார் என்றும் அவர் ஆண்மையற்றவர் என்றும் கூறியுள்ளார். ஆனால் இதனை மௌலானா முற்றிலுமாக மறுத்துள்ளார். பின்னர் இது தொடர்பாக இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் அந்த பெண் கணவனின் தம்பியுடன் செல்வதில் உறுதியாக இருந்த நிலையில் போலீஸ் ஸ்டேஷன் முன்பாகவே மௌலானா முத்தலாக் மூலம் விவாகரத்து வழங்கினார்.
இந்த சம்பவம் ஏற்கனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மௌலானா ஷாகிர் இது பற்றி கூறிய விஷயங்கள் சமூக வலைதளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி அவர் கூறியதாவது, தாடி என்பது என்னுடைய மத நம்பிக்கையின் ஒரு பகுதி. அதற்காக நான் 10 மனைவிகளை கூட தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால் ஒருபோதும் என் தாடியை மட்டும் வெட்டவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.