தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் தங்களது உயர்கல்வி திறனை மெருகேற்றும் வகையில் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாணவிகள் போல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும்  இந்த திட்டமானது வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். தமிழக அரசு பள்ளியில் படித்த மாணவர்களால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அரசு பள்ளியில் ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும். இதற்கு விண்ணப்பிக்க பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார், பள்ளி தேர்ச்சி பெற்ற சான்றிதழ், முகவரிக்கான ஆதாரம், வருமான சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, வங்கி விவரங்கள்.