பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, அறிவுசார் பொருளாதாரம் உட்பட 7 மாபெரும் தமிழ் கனவு’ என்ற தலைப்பின் கீழ் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் பால்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்தவகையில்  2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். கலைஞரின் கனவு இல்லம் என இத்திட்டத்திற்கு பெயர் சூட்டல் . கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் சாலைப்பணிகள் ₹1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்