
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் பொருட்களை மக்கள் சிரமம் இல்லாமல் வாங்க அரசு பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் அட்டைதாரர்கள் வாங்கும் அளவிற்கு மேல் வினியோகம் பட்டியல் தயார் செய்யக்கூடாது என்று ரேஷன் ஊழியர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இச்செயல், போலி பட்டியல் என்ற வகையில் ஒழுங்கு நடவடிக்கையுடன் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. விரல் ரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு தோல்வி அடைந்தால் அதனை கூறி பொருள் வாங்க மறுக்கக்கூடாது எனவும் கையெழுத்து பெற்று ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.