தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் இலவசமாகவும் மானிய விலையிலும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி காலை 10 மணி முதல் ஒரு மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரம் சான்று வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயனடையுங்கள்.