தமிழகத்தில் துணை கலெக்டர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட 90 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 முதல் நிலை தேர்வு ஜூலை 13 இன்று நடைபெற உள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி பகல் 12.30 மணி வரை இந்த தேர்வு நடைபெறும்.

சென்னை உட்பட 38 மாவட்டங்களிலும் 797 தேர்வு அறைகளில் தேர்வு நடைபெற உள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் 124 அறைகளில் தேர்வு நடைபெறுகிறது. இந்த பணியிடங்களுக்கு மார்ச் மாதம் 18ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் ஏப்ரல் 27ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. மொத்தம் 90 பணியிடங்களுக்கு 2,38,247 பேர் போட்டி போடுகின்றனர்.