
தமிழகத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது போதைப்பொருட்களை தடுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.