நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை கண்காட்சி மூலமாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றனர். சென்னையில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏ, பி, சி என மாவட்டங்களை மூன்று வகையாக பிரித்து 78.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு முதல் சென்னையை போன்று அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட தொகையை விட இந்தாண்டு கூடுதலாக அரசு தொகை ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.